Friday, October 07, 2016

மெட்டாபிலிம் (Metafilm)

மெட்டாபிலிம் (Metafilm)

எச்.முஜீப் ரஹ்மான்

மெட்டாபிலிம் அல்லது மெட்டாமுவீ அல்லது மெட்டாசினிமா என்பது தற்சுட்டு (self-referential) திரைப்படம் ஆகும்.மெட்டாபிக்ஸன் என்பது வாசகர்கள் நூலை வாசிக்கிறார்கள் என்ற உணர்வை மறக்கடிக்கச் செய்யாமல் இருப்பதை போல மெட்டாபிலிம் பார்வையாளனை தாங்கள் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மூழ்கடித்து விடாமல் தாங்கள் தியேட்டரில் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதை மறக்கடித்துவிடாமல் செய்கிறது.சினிமாவில் சினிமாவை பற்றிச்சொல்லும் முறைகூட இந்த வகைப்பட்டதாகும்.தமிழைப் பொறுத்தவரை சினிமாவும்,சினிமா கதாப்பாத்திரங்களும் சினிமாவில் பங்கெடுத்துக்கொண்ட பல படங்கள் உள்ளன.உதாரணமாக அன்புள்ள ரஜினிகாந்த் படம் மெட்டாபிலிம் வகைப்பட்டதாகும். மெட்டாபிக்ஸன் என்பது தற்கால புனைகதை பாணியாக இருக்கிறது. புனைகதையில் உத்திதிட்டத்தை சொல்லுவது மெட்டாபிக்ஸன் ஆகும்.
தற்சுட்டு /சுய குறிப்புரை (self-reference) மெட்டாபிலிம்,மெட்டாபிக்ஸனில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.தற்சுட்டு என்பது ஒரு அறிவிப்பை அதுதானே சொல்லுவது என்பதாகும்.குறிப்புரை (reference) என்பது இரண்டு தர்க்க அளவுகளை கொண்டது. ஒன்று ஒரு தளம் மற்றது பெருந்தளம் என்பனவாகும்.அது பொதுவாக கணிதம்,தத்துவம்,கணிணி நிரல்,மொழியியல் என்ற பயன்பாடுடையதாகும்.தற்சுட்டு அறிவிப்பு என்பது முரண்பாடு போல தோன்றும் மெய்யுரையாகும்.ஆனால் எதிர்பதம் வரையறைகளுக்கு உட்பட்டு முக்கியத்துவம் கருதி பயன்படுத்தப்படும்.உதாரணமாக ரமேஷ்-பிரேமின் முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன எனும் கதையில் வரும் வரிகளை பார்ப்போம்.
”எந்த ஒன்றாலும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத அந்த வாடை முதன் முதலில் தனது அறையின் நிலைக் கண்ணாடியிலிருந்தே வெளிப்பட்டு தன்னையும் தனது கிராமத்தையும் சுற்றி வளைத்ததின் நினைவுகளில் புதைந்து போனான்.”
அது போல எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை நூலில் வரும் 'கனவுகளை வரைந்து பார்த்த கனவியல்வாதி' எனும் இக்கதையில் தலைப்பே தற்சுட்டு தன்மையை கொண்டதாகும்.
“கனவுகளைக் கொண்டு தைத்த ஆடைகள் அந்தத் தையலகத்தில் நிறைய தொங்கிக் கொண்டிருந்தன.”
மெட்டாபிக்ஸன் கதை தன்மை கூட தமிழ் கதை மரபில் காணக்கிடக்கிறது.கதைக்குக் காலுண்டா கையுண்டா என்பது தற்சுட்டு வாக்கிய அமைப்பாகும்.கதையை பார்ப்போம்.
“ஒருத்தனுடைய வீட்டுக்காரிக்கி ஒரு கதை தெரியும்.அவளுக்கு ஒரு பாட்டும் தெரியும்; ஆனா அவ யாருக்கிட்டயும் சொல்லவுமில்லே, பாடவுமில்லே”.
அவளுக்குள்ளேயே செறப்பட்டுக் கிடந்த அந்தக் கதையும் பாட்டும் விடுதலை அடைய விரும்பின.; அவளெ விட்டு ஓடணன்னு நெனெசுச்சுக. ஒரு நா(ள்) கதெ எப்படியோ அவளைவிட்டு வெளியேறி தப்பிச்சி ரெண்டு செருப்புகளா வடிவெடுத்து வீட்டுக்கு வெளியே உக்கார்ந்துக்கிடிச்சு.பாட்டு ஒரு கோட்டாக மாறி வீட்டுக்குள்ளே ஒரு ஆணியிலே தொங்குச்சு.
வீட்டுக்கு வந்த புருஷன் கோட்டையும் செருப்பையும் பார்த்துக்கிட்டு யாரு வந்ததுன்னு கேட்டான்?.
யாரும் வரல்லேயே ன்னா அவ.அவனுக்குத் திருப்தியில்லே. அவனுக்கு சந்தேகம் வந்திருச்சு. அவங்க ரெண்டு பேரும் சண்டைப்போட்டுக் கிட்டு அவன் அனுமாரு கோவிலுல ஒரு போர்வய எடுத்துக்கிட்டு போய் படுத்துக்கிட்டான்.
பொண்டாட்டிக்கி என்ன நடக்குதுண்ணு ஒண்ணுமே புரியல. அண்ணக்கி ராத்திரி அவ தனியா படுத்துக்கிட்டு யோசிச்சா. நெடு நேரம் தூங்கலே. யாரு கோட்டு யாரு செருப்புண்ணு திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டா.பதிலில்லே.வெளக்க அணச்சிக்கிட்டு தூங்கப் போனா.
அணச்ச பெறகு வெளக்குக (சுடர்கள்) எல்லாம் அனுமாரு கோவிலுக்கு வந்து சேருறது வழக்கம். ஒரேயொரு வீட்டு வெளக்கத் தவிர மத்ததெல்லாம் வந்து சேந்துருச்சு. அது மட்டும் பிந்தி வந்துச்சு. மத்தெல்லாம்,
இண்ணைக்கு மட்டும் நீயேன் ரொம்ப பிந்தி வர்றேண்ணு? கேட்டுச்சுக.
எங்க ஊட்டுல புருஷன் பொண்டாட்டி சண்ட போட்டுக்கிட்டாங்கன்னு சுடர் சொல்லிச்சு.
ஏன் சண்ட போட்டாங்க?
நடந்த எல்லா வெவெரங்களயும் அது சொல்லிச்சு. கதையும் பாட்டும் தான் கோட்டாட்டும் செருப்பாட்டும் மாறுனத சொல்லிச்சு.
போத்திக்கிட்டு படுத்துருந்த புருஷன்காரன் அத கேட்டுகிட்டிருந்தான்.அவன் சந்தேகம் தீந்திருச்சு. விடிஞ்ச பொறவு வீட்டுக்கு போனான். எல்லாவிஷயத்தையும் பொண்டாட்டிக்கிட்ட சொன்னான். அந்த கதயும் பாட்டும் அவளுக்கு மறந்து போச்சுங்கிறதே அவ அப்புறம் தான் தெரிஞ்சுக்கிட்டா.
தற்ச்சுட்டு சூழல் என்பது இலக்கியத்தில் ஆசிரியன் தனது நூலை தாமே சூழக்கு தக்கன பயன்படுத்தலாகும்.உதாரணமாக ஆறு கதாப்பாத்திரங்கள் ஆசிரியனை தேடியலைவது போன்ற டென்னிஸ் டிடேரட்டின் கதையை சொல்லாம்.இது நான்காவது சுவர் கருத்தாக்கதை ஒட்டியது ஆகும்.
உதாரணங்கள்:
1.ஒரு வார்த்தை தன்னைதானே விவரிப்பது
2.பழமொழி கசக்கும்.பின்னால இனிக்கும்.இது பழமொழி பற்றிய கருவி மொழியாகும்.
3.ஒரு கட்டுரை அதற்க்காக பல தொடர்புகளை கொண்டிருந்தால் அவை சுய தொடர்பு என்றழைக்கப்படுகிறது.
4.சட்டகம் என்கிற அமைப்பு வழியாக தற்சுட்டு சாத்தியப்படுகிறது.
மெட்டா சுட்டு (Meta-reference)
அ-சுட்டு என்பது ஒரு சூழல் ஊடகத்தின் வடிவாக இருக்கும் போது புனைவு பாத்திரங்கள் விழிப்புணர்வுடன் தம்மை வெளிப்படுத்தும் நிலையை குறிக்கிறது. சினிமாவில் சினிமா எடுக்கப்பட்ட விதம் பற்றிச் சொல்லுவது மெட்டா ரெபரன்ஸ் ஆகும்.சிம்சன் என்பவரது மெட்டா ரெபரண்ஸ் பற்றிய மேற்கோள் புகழ்மிக்கதாகும்.அதாவது கார்டூன் படத்தில் வரும் ஒரு பாத்திரம் குறுக்கு சந்தில் ஓடும் போது ஒரு கைவந்து உடனடியாக அந்த பாத்திரத்தின் உடலை சிறிதாக்குகிறது.அதன் பின்னர் அது ஓடுகிறது. ஒரு பாத்திரத்தை எந்த சூழலிலும் நான் மாற்றிக்காட்டுவேன் என்ற ஒரு கார்டூன் சித்திரக்காரனின் கதை இது. என்பதே அந்த மேற்கோள்.
உதாரணங்கள்:
1.சௌத் பார்க் என்ற அமெரிக்க டி.வி.நிகழ்ச்சியொன்றில் ரேட்டிங் தரவரிசை செய்து கொண்டிருந்த ஒருவர் நடித்த அடுத்த புரோகிராமில் சௌத் பார்க் நிகழ்ச்சியை பற்றிச்சொல்லி தரவரிசையில் முக்கியமான ஒரு செய்தியை மறந்துவிட்டதாக சொல்வது அ சுட்டு வகையாகும்.
2.பிரபல காமிக்ஸ் இதழில் வெளிவந்த பியானோ என்ற தொடரை பற்றி அந்த தொடரில் வந்த கதாபாத்திரங்கள் விமர்சனம் செய்து பியானோ இதழ் படித்துக்கொண்டிருப்பது அ சுட்டு வகையாகும்.
3.இடலோ கால்வினோவின் குளிர்கால இரவில் ஒரு பயணி என்ற நாவலில் அந்த பயணி வந்த டிரைனில் இருந்து வந்த புகை முதல் அத்தியாயம் முதல் வரியில் வந்து உங்களை திக்குமுக்காடச் செய்தது என்று சொல்லும் முறை அ சுட்டு வகையாகும்.
4.தமிழ் சினிமா ஒன்றில் டைரக்டராக வரும் கதாபாத்திரம் அந்த படத்தின் கதாபாத்திரத்தோடு பேசும் போது நீங்கள் எடுத்த சில படங்கள் படங்களின் பெயரைகூறி பேசுவது அ சுட்டு வகையாகும்.
தமிழ் சினிமாவில் சினிமாவை பற்றிய சினிமா காட்சிகள் நிறைய இருக்கிறது.ஆனால் இந்த நிலையும் தாண்டி ஒரு கதையை இன்னொரு கதையால் சொல்லுவதும் மெட்டாபிலிம் வகையாகும்.தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் மெட்டாபிலிம் ஆகும்.அந்த படத்தின் கதை மகாபாரதத்தை மறு உருவாக்கம் செய்ததாகும்.ரஜினியின் பாத்திரம் கர்ணனின் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.அண்மையில் வெளிவந்த ரஜினியின் சந்திரமுகி படம் பின் நவீன வகையிலுள்ளதாகும்.ஊடிழை பிரதியாக்கம் அப்படத்தில் சந்திரமுகி என்ற வரலாற்று கதையை நிகழ்த்தியிருக்கிறது. பழமையின் பூரிப்பு என்பதும் புராதன மாந்திரீகத்தின் உளவியல் நிலைகளை துல்லியபடுத்தியிருக்கிறது.மெட்டாபிலிமில் கதைபற்றிய கதை,கதைக்குள் கதை,சினிமா பற்றிய சினிமா,சினிமாவுக்குள் சினிமா என்ற பல்வேறு நிலைபாடுகள் காணப்படுகிறது.
மெட்டாபிலிம் பற்றிய நூல்கள்
1.Six Characters in Search of an Author----Luigi Pirandello
2. The Lickerish Quartet --- Radley Metzger
3. Teorema --- Pier paolo pasolini
4. Sitcom --- Francois Ozon
Reflexivity in film and literature: From Don Quixote to Jean-Luc Godard (1985) - Robert Stam
சில மெட்டாபிலிம்கள்
1.La Nuit amளூricaine/Day for Night (1973) - Franவூois Truffaut
2.Sex is Comedy (2002) - Catherine Breillat
3.C'est Arrivளூ Pres de Chez Vous/Man Bites Dog (1992) - Rளூmy Belvaux Andrளூ Bonzel, ...
4.Medium Cool (1969) - Haskell Wexler
5.Cinema Paradiso (1989) - Giuseppe Tornatore
6.Film-within-a-film
7.A Postmodern Cinema (2002) - Mary Alemany-Galway
8.Close Up 1927-1933: Cinema and Modernism (1998) - James Donald, Anne Friedberg, Laura Marcus
மெட்டாபிலிமுக்கும்,பின் நவீன சினிமாவுக்கும் அதிகம் வித்தியாசம் ஒன்றும் இல்லை. தற்சமயம் வெளிவரும் தமிழ் படங்களில் மெட்டாபிலிமுக்கான தன்மைகள் இல்லை என்று சொல்லமுடியும்.ஆனால் தமிழில் இப்போது மொழிமாற்றம் செய்யப்பட்ட அநேக ஆங்கில படங்களை நாம் பின் நவீனத்துக்குரியதாகவும், மெட்டாபிலிமாகவும் இருப்பதை காணமுடியும்.
---------------------------------
எச்.முஜீப் ரஹ்மான்.

திராவிட பொருளாதாரம்

திராவிட பொருளாதாரம்


எச்.முஜீப் ரஹ்மான்


தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பணக்கார மற்றும் மிகப்பெரிய பொருளாதார மாநிலமாகவும், நாட்டிலேயே மிகவும் தொழில்மயமான மாநிலமாகவும் உள்ளது. [ஆதாரம்: "இந்திய மாநிலங்களின் GDP - StatisticsTimes.com" . m.statisticstimes.com . ஜூன் 1, 2021 இல் பெறப்பட்டது .) 60% க்கும் அதிகமான மாநிலம் நகரமயமாக்கப்பட்டுள்ளது, நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகையில் 10.6% க்கும் அதிகமானவர்கள், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 6% மட்டுமே உள்ளனர் . மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் 55% சேவைகள் பங்களிக்கின்றன, அதைத் தொடர்ந்து உற்பத்தி 34% மற்றும் விவசாயம் 11%. மொத்த முதலீடுகளில் 52%, தனியார் இந்திய முதலீட்டாளர்கள் 29.9% மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்கள் 14.9% உடன் மாநிலத்தின் முக்கிய முதலீட்டாளர். இந்திய மாநிலங்களுக்கான பொருளாதார சுதந்திர தரவரிசையில் இது இந்தியாவில் மிகவும் பொருளாதார ரீதியாக சுதந்திரமான மாநிலமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. [ "பொருளாதார சுதந்திரத்தின் மூலம் இந்திய மாநிலங்கள் - StatisticsTimes.com" . statisticstimes.com _ 25 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது ]இவை அனைத்தும் திராவிட மாடலின் சாதனை என்றால் மிகையில்லை.திராவிட பொருளாதாரம் என்றால் என்ன? மிகையில்லாமல் சொன்னால் அனைவருக்கும் சமவாய்ப்பு கொடுத்து பொருளாதார தன்னிறைவை அடைய செய்யும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு திராவிட பொருளாதரம் என்று அழைக்கலாம்.


திராவிட பொருளியல் அறிஞர் ஜெயரஞ்சன் சமீபத்தில் இவ்வாறு கூறினார்.- இன்று 12ஆம் வகுப்பிற்கு பிறகு மேல்படிப்பு படிக்கக்கூடியவர்களின் விகிதம் 55 விழுக்காடு வந்துவிட்டது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்தியாவின் சராசரி விழுக்காடே 26 விழுக்காடுதான். 55 விழுக்காடு அளவில் பிள்ளைகள் படிக்கிறது என்றால் அவர்களுடைய தேடல் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தேவையானதை இயக்கம் தயாரித்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.


அமெரிக்காவில் இன்று சமூக நீதி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவும் இன்று பேச ஆரம்பித்துள்ளனர். புதிய பொருளாதார கொள்கைகள்தான் நம்மை காப்பாற்றும் என்று பேசிக்கொண்டு இருந்தவர்கள் இன்று சமூக நீதிதான் முக்கியம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் சமத்துவமின்மை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சமத்துவமின்மை அதிகரிக்கும்போது வலதுசாரிகள் வெறுப்பரசியலை வளர்க்கிறார்கள். வெறுப்பரசியல் நம் ஊரில் மட்டும் இல்லை. இன்றைக்கு நம்மை தமிழ்ச்சமூகத்தின் எதிரிகள் எனக் கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்திற்கு நம்முடைய இயக்கம் அளித்துள்ள பங்களிப்பு பல தளங்களில் உள்ளது.


பெரியாரை வெறும் கடவுள் எதிர்ப்பாளராக மத மறுப்பாளராகச் சுருக்கி பார்க்கிறார்கள். இன்றைக்கு நவீன சிந்தனையில் பேசக்கூடிய விஷயங்களை பெரியார் அன்றைக்கே செய்துள்ளார். சமுதாயத்தை பற்றி தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்ததால் அந்த அறிவு அவருக்கு கிடைத்தது. பல இயக்கங்கள் தோன்றியிருந்தாலும் அவர்கள் தங்கள் பார்வையை மதவிடுதலை, இன விடுதலை எனக் குறுகலாக வைத்திருந்தனர். ஆனால், பெரியார் அப்படியில்லை. காலையில் அமர்ந்து மடாதிபதிகளுடன் இந்தியை எதிர்த்துக்கொண்டு இருப்பார். மாலையில் அந்த மாடாதிபதிகளை திட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பார். இங்கிருக்கும் அனைத்து பேதங்களையும் ஒழிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கு எவையெல்லாம் எதிராக இருக்கிறதோ அவற்றையெல்லாம் விமர்சனம் செய்தார். பெரியார் என்ன செய்தார் என்பதையும் திராவிடம் என்றால் என்ன என்பதையும் பல வடிவங்களில் சொல்லவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.


பெரியார் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் என்பதை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல வேண்டும். அண்ணன் ராசா டெல்லியில் பெரியார் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில் பெரியார் பற்றி எதாவது புத்தகம் இருந்தால் கொடுங்கள் என்று யாராவது கேட்டால் நம்மிடம் கொடுக்க என்ன புத்தகம் இருக்கிறது? இந்த அனுபவம் எனக்கே நிகழ்ந்துள்ளது. ஆகவே அந்த தளத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


திராவிட இயக்கத்தின் கொள்கை என்பது பிச்சைக்காரராக இல்லாமல் அனைவரையும் மானுடராக மாற்றுவது. தலை நிமிர்ந்து நடக்கும்போதுதான் ஒருவன் மானுடராக மாறுகிறான். தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்றால் அவனுக்கு சமஉரிமை வேண்டும் . கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி குப்பை அள்ளுபவராக இருந்தாலும் சரி ஒருத்தருக்கு ஒரு ஓட்டு என்றார் அம்பேத்கர். அது வழியாகத்தான் அரசியல் அதிகாரம் ஜனநாயகப்படுத்தப்பட்டது. பொருளாதார அதிகாரத்தையும் சமூக அதிகாரத்தையும் ஜனநாயகப்படுத்த முடியாத நாடுதான் இந்த நாடு. இவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை 1967இல் இருந்து செயல்வடிவத்தில் கட்டிக்கொண்டு இருக்கிறோம்" எனக் கூறினார்.இந்த கருதுகோள் திராவிட பொருளியலின் அடிநாதமாகும்.


ஒரு நூற்றாண்டு திராவிட மாடலின் தாக்கத்தால் இன்று தமிழ்நாடு பல்வேறு உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. பொறியியல், மருந்து, ஆடைகள் உள்ளிட்ட பல துறைகளில் தேசிய முன்னணியில் உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கையில், அனைத்து மாநிலங்களிலும் முதலிடத்தில் உள்ளது.


தமிழ்நாடு இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமாகும். இது பலதரப்பட்ட உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது மற்றும் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், பொறியியல், மருந்துகள், ஆடைகள், ஜவுளிகள், தோல், இரசாயனங்கள், பிளாஸ்டிக் போன்றவை போன்ற பல தொழில்களில் முன்னணியில் இருக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் மாநிலங்களில் இது முதலிடத்தில் உள்ளது. 


தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ), தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் லிமிடெட் (டிஐஐசி), தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (டான்சிட்கோ) ஆகியவை இணைந்து மாநிலத்தில் தொழில்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகின்றன. .


தற்போதைய விலையில், தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) ரூ. 2022-23ல் 24.85 டிரில்லியன் (US$ 320.27 பில்லியன்). 2015-16 மற்றும் 2022-23 க்கு இடையில் மாநிலத்தின் GSDP CAGR இல் 11.27% அதிகரித்துள்ளது.2020-21 ஆம் ஆண்டில், தற்போதைய விலையில் மாநிலத்தின் மொத்த மாநில மதிப்பு கூட்டலுக்கு (GSVA) ​​மூன்றாம் நிலைத் துறை 54.33% பங்களித்தது, அதைத் தொடர்ந்து இரண்டாம் நிலைத் துறை 32.72% ஆகும்.மார்ச் 2022 நிலவரப்படி, மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 35.14 ஜிகாவாட் ஆகும்.


தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) படி, அக்டோபர் 2019-டிசம்பர் 2021 க்கு இடையில், தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு 5,707.82 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அன்னிய நேரடி முதலீடுகளில் மாநிலம் இந்தியாவில் 5வது இடத்தில் உள்ளது.FY22 இல் (பிப்ரவரி 2022 வரை) மாநிலத்தில் இருந்து மொத்த சரக்கு ஏற்றுமதி 31.52 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. தமிழகத்தில் இருந்து ஐடி மற்றும் ஐடிஇஎஸ் ஏற்றுமதி ரூ. 2018-19 இல் 1.39 லட்சம் கோடி (19.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்), 10% ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் உள்ளது.தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு பணியகம் தமிழ்நாட்டிற்கு முக்கிய முதலீட்டு திட்டங்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டை முதலீட்டுத் தலமாக மேம்படுத்துவதற்கு அரசு எடுத்துள்ள சில முக்கிய முயற்சிகள் முக்கியமானவை.


மே 2022 இல், அக்மி சோலார் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட ஏழு ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பச்சை அம்மோனியா உற்பத்தி நிலையத்தை தமிழ்நாட்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

மே 2022 இல், தெற்கு ரயில்வே வட தமிழகத்தில் 18 நிலையங்களில் மாசு உமிழ்வைக் குறைக்க சூரிய மின் நிலையங்களை அமைக்கப் போவதாக அறிவித்தது.மே 2022 இல், மாநில சுற்றுலா அமைச்சர் திரு. எம் மதிவேந்தன், சுற்றுலா தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்:

கிழக்கு கடற்கரை சாலையில், இந்து சமய அறநிலையத் துறையுடன் (HR and CE) இணைந்து, ரூ. 1.5 கோடி (அமெரிக்க டாலர் 193,362)ஆகும்.


ஒவ்வொரு ஆண்டும், மாநில தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து, கோடை விழா, பூ, பழம், காய்கறி, பனை பொருட்கள் கண்காட்சி மற்றும் கண்காட்சி உள்ளிட்டவை சென்னையில் ரூ. 25 லட்சம் (அமெரிக்க டாலர் 32,227)ஆகும்.செங்கல்பட்டில், பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் கொளவாய் ஏரி ஆகியவை, நீர் விளையாட்டு, படகு சவாரி, சாகச நடவடிக்கைகள், பறவைகள் கண்காணிப்பு தளம் உள்ளிட்ட செயல்பாடுகளுடன் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.செப்டம்பர் 2021 இல், 2,000 மெகாவாட் பேட்டரி சேமிப்பு அமைப்புடன் 4,000 மெகாவாட் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ய தமிழ்நாடு முழுவதும் சூரிய சக்தி பூங்காக்களை அமைக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.செப்டம்பர் 2021 இல், UAE-ஐ தளமாகக் கொண்ட DP வேர்ல்ட் ரூ. முதலீடு செய்யும் திட்டங்களை அறிவித்தது. 2,000 கோடி (அமெரிக்க டாலர் 271.68 மில்லியன்) தமிழ்நாட்டில் பல திட்டங்களை நிறுவ. இந்த திட்டங்களில் சரக்கு பெட்டக முனையம், குளிர்பதன கிடங்கு மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் மண்டலம், ஒருங்கிணைந்த ரயில் பாதையுடன் கூடிய தடையற்ற வர்த்தக மண்டலம், தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் சிறு துறைமுகம் மற்றும் ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூரில் உள்ள உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள் ஆகியவை அடங்கும்.


செப்டம்பர் 2021 இல், ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 1,095 கோடி (US$ 150 மில்லியன்) கடன் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற ஏழைகளுக்கு உள்ளடங்கிய, நெகிழ்ச்சியான மற்றும் நிலையான வீடுகளை அணுகுவதற்கு.

2021 செப்டம்பரில், தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை உறுதிசெய்ய நான்கு தொழிற்பேட்டைகள் நிறுவப்படும் என்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் திரு. டி.எம்.அன்பரசன் அறிவித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் கோடூர், மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் மொத்தம் 394 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிட்கோ) மூலம் ரூ. . 218.22 கோடி (US$ 38.20 மில்லியன்), இது 7,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 2021 இல், 144 கிமீ கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் ரூ. கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் மாநகராட்சி சாலைகள் வழியாக 6,300 கோடி ரூபாய் (855.79 மில்லியன் அமெரிக்க டாலர்கள்)ஆகும்

.

ஆகஸ்ட் 2021 இல், அடுத்த 10 ஆண்டுகளில் தாலுகா தலைமையகம் மற்றும் மாவட்டத் தலைமையகங்களை இணைக்கும் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக 'முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தை' மாநில அரசு அறிவித்தது. அரசு ரூ. 3,200 கோடி (US$ 434.69 மில்லியன்) 2222 நிதியாண்டில் சாலைகளை இருவழி மற்றும் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தி போக்குவரத்தின் தடையற்ற இயக்கத்தை எளிதாக்குகிறது.ஆகஸ்ட் 2021 இல், மத்திய அரசின் பணமாக்குதல் திட்டத்தில் தமிழ்நாட்டில் நான்கு விமான நிலையங்கள் இடம்பெற்றன. FY22 இல் பிரவுன்ஃபீல்ட் PPP மாதிரிகள் மூலம் பணமாக்குதலுக்காக திருச்சி விமான நிலையம் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து FY23 இல் மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களும் FY24 இல் சென்னை விமான நிலையமும் அடங்கும்.ஜூலை 2021 இல், தமிழ்நாடு 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) பரிமாறிக்கொண்டது. 17,141 கோடி (2.33 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் 55,054 பேருக்கு வேலை வாய்ப்பு. இந்த முதலீடுகள் மின் உற்பத்தி நிலையங்கள், மின்னணுவியல், வாகன உதிரிபாகங்கள், தொழில் பூங்காக்கள், IT/ITeS சேவைகள், உணவு பதப்படுத்துதல், பாதணிகள், மருந்துகள் மற்றும் ஜவுளித் துறைகளில் உள்ளன.உற்பத்தித் துறையில் 15% ஆண்டு வளர்ச்சி விகிதத்தை அடைய, ரூ. மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 'தொழில்துறை கொள்கை 2021' அறிமுகப்படுத்தப்பட்டது. 10 லட்சம் கோடி (137.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் 2025-க்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.


பிப்ரவரி 2021 இல், Flipkart உள்ளூர் கைவினைஞர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை இ-காமர்ஸ் சந்தையில் கொண்டு வர தமிழ்நாடு MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.ஜனவரி 2021 இல், தமிழ்நாடு 34 முக்கிய முதலீட்டு திட்டங்களுக்கு ரூ. 52,257 கோடி (7.14 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). இந்த முதலீடுகள் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைகளில் 93,000 வேலைகளை உருவாக்க வாய்ப்புள்ளது, இதில் மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் செல் உற்பத்தி ஆகியவை அடங்கும்.2020 டிசம்பரில், பரஸ்பர முதலீடுகளை எளிதாக்குவதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், தமிழகத்தின் தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம் மற்றும் இந்திய-பிரெஞ்சு வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றுடன் பிரான்ஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடும் என்று தமிழ்நாடு அறிவித்தது.


நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மாநிலத்தை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டுத் திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. திட்டத்திற்கு ரூ. 8,156 கோடி (1.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் நிதியளிக்கப்படும். மேலும், 179 திட்டங்கள் ரூ. தமிழ்நாடு தொடர்பான 8.6 லட்சம் கோடி (117.58 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தேசிய உள்கட்டமைப்பு குழாய்த்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2020-25) செயல்படுத்தப்படும்.விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (CRIDP) என்பது மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முதன்மைத் திட்டமாகும். 2020-21 பட்ஜெட்டின் கீழ், ரூ. இத்திட்டத்திற்கு 5,500 கோடி (780.25 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது.ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் ரூ. 2020-21 பட்ஜெட் மதிப்பீடுகளில் 90.85 கோடி (12.89 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கப்பட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டில், தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை, 2019 ஐ முதலமைச்சர் தொடங்கினார்.2019ல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழகம் முதலிடத்திலும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 2018 ஆம் ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 6.07 மில்லியனை எட்டியது, அதே நேரத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 385.90 மில்லியனை எட்டியது.

ஜூலை 2020 இல், தமிழ்நாடு அரசு 1.48 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது; இது சூரிய மின்கலங்கள், தரவு மையங்கள் மற்றும் தொழில் பூங்காக்கள் போன்ற துறைகளில் 13,507 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் வனவியல்


தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களில் பாதி பேருக்கு விவசாயம்தான் வாழ்க்கை. மிக ஆரம்ப காலத்திலிருந்தே, சிறிய மற்றும் பெரிய நீர்ப்பாசன நீர்த்தேக்கங்கள் அல்லது "தொட்டிகளில்" பற்றாக்குறை மழைநீரை தமிழ் விவசாயிகள் திறமையாக பாதுகாத்துள்ளனர். அரசு கால்வாய்கள், குழாய் கிணறுகள் மற்றும் சாதாரண கிணறுகளும் நீர்ப்பாசன அமைப்பின் ஒரு பகுதியாகும். பல நதி பள்ளத்தாக்கு திட்டங்கள் ஒழுங்கற்ற வடகிழக்கு பருவமழையால் வரும் மழையை நம்பியிருப்பதால் , அரசாங்கம் மண்ணின் அடிப்பகுதி நீராதாரங்களையும் தட்டுகிறது.


விவசாய நடைமுறைகள் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பல பயிர்கள், வலுவான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட முக்கிய பயிர்களின் பயன்பாடு மற்றும் இரசாயன உரங்களின் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் தீவிர முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன; 1960களின் பிற்பகுதியிலிருந்து உணவு தானிய உற்பத்தியில் மாநிலம் தன்னிறைவு பெற்றுள்ளது. உள்நாட்டு நுகர்வுக்கான முக்கிய பயிர்கள் அரிசி, தினை மற்றும் பிற தானியங்கள், அத்துடன் வேர்க்கடலை (நிலக்கடலை) மற்றும் பருப்பு வகைகள் (கடலை போன்றவை); கரும்பு , பருத்தி, முந்திரி மற்றும் மிளகாய் ஆகியவை முக்கியமான பணப்பயிர்கள். தமிழ்நாட்டில் பல விவசாயிகள் கால்நடைகள், முதன்மையாக மாடுகள் (குறிப்பாக பால் தொழிலுக்கு), கோழி , ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை வளர்க்கின்றனர்.


தமிழகம் இந்தியாவின் முதன்மையான மீன் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும், பெரும்பாலான விளைச்சல் கடல் நடவடிக்கைகளில் இருந்து வருகிறது, இருப்பினும் பல உள்நாட்டு மீன்பிடிகளும் உள்ளன. கூடுதலாக, மாநிலம் ஒரு செயலில் உள்ள வனவியல் துறையைக் கொண்டுள்ளது, இதில் கூழ் மரம், பாபுல் (மதிப்புமிக்க டானின் விளையும் ஒரு வகை அகாசியா), விறகு, மூங்கில் மற்றும் தேக்கு ஆகியவை முதன்மை தயாரிப்புகளில் உள்ளன. பெரும்பாலும் தோட்டங்களில் வளர்க்கப்படும் ரப்பரும் முக்கியமானது.


வளங்கள் மற்றும் சக்தி


சுண்ணாம்புக்கல், பாக்சைட், ஜிப்சம், லிக்னைட் (பழுப்பு நிலக்கரி), மேக்னசைட் மற்றும் இரும்புத் தாது ஆகியவை தமிழ்நாட்டில் வெட்டப்படும் முக்கிய கனிமங்கள் ஆகும். மாநிலத்தின் வட-மத்திய பகுதியில் உள்ள நெய்வேலியில் உள்ள திறந்தவெளி லிக்னைட் சுரங்கம், இந்தியாவின் மிகப் பெரிய சுரங்கமாகும் , மேலும் அதன் தயாரிப்புகள் மாநிலத்தின் மின்சாரத்தில் பெரும்பகுதியை வழங்கும் அனல் மின் நிலையத்திற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் ஆற்றலின் பெரும்பகுதி அனல்மின் நிலையங்களில் இருந்து வருகிறது, ஆனால் நீர்மின் நிலையங்கள்-குறிப்பாக காவேரி ஆறு மற்றும் அதன் துணை நதிகள்-ஒரு முக்கியமான இரண்டாம் நிலை ஆற்றலை வழங்குகின்றன. காற்றாலை மின் உற்பத்தியிலும் மாநிலம் முன்னணியில் உள்ளது.


உற்பத்தி


இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும், மேலும் உற்பத்தித் துறை மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. வாகனங்கள், விவசாய உபகரணங்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் இரயில் கார்கள் போன்ற கனரக வாகனங்களின் உற்பத்தி மாநிலத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்; பெரம்பூரில் (சென்னைக்கு அருகில்) உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். சென்னையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை உள்ளது. மற்ற முக்கிய உற்பத்தி நடவடிக்கைகளில் ஜவுளி அரைத்தல், உணவு பதப்படுத்துதல் மற்றும் மருந்துகள், இரசாயனங்கள் மற்றும் மின்னணு பாகங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி ஆகியவை அடங்கும். தமிழ்நாடு கைவினைப் பொருட்கள், குறிப்பாக பித்தளை, வெண்கலம் மற்றும் செப்புப் பாத்திரங்கள், தோல் வேலைகள், கைத்தறி பட்டு, கலம்காரி ஆகியவற்றில் நிறைந்துள்ளது.(இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி கையால் வரையப்பட்ட துணி), மற்றும் செதுக்கப்பட்ட மரம், பனை ஓலை மற்றும் கரும்பு ஆகியவற்றிலிருந்து வடிவமைக்கப்பட்டவை.


சேவைகள்


20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து சேவைத் துறை குறிப்பாக வேகமாக வளர்ந்துள்ளது, மேலும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அது தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக மாறியது. தகவல்-தொழில்நுட்பத் துறையின் விரிவாக்கம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளின் முன்னுரிமையாக உள்ளது. உள்கட்டமைப்பு , தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து மேம்பாடுகளுடன் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் .


போக்குவரத்து


தென்னிந்திய மாநிலங்களின் போக்குவரத்து அமைப்பு சென்னையில் சங்கமிக்கிறது. நன்கு வளர்ந்த சாலை வலையமைப்பு அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ஆர்வமுள்ள இடங்களுக்கும் விரைவு பேருந்து சேவையை வழங்குகிறது. பல ரயில்களும் மாநிலம் வழியாக இயக்கப்படுகின்றன.


இந்தியாவின் இரண்டு முக்கிய துறைமுகங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன - வடக்கில்சென்னை மற்றும் தெற்கில் தூத்துக்குடி . சென்னைக்கு அருகில் உள்ள மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும். மதுரை , கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி உட்பட பல நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் உள்ளன ; திருச்சிராப்பள்ளி விமான நிலையம் உள்நாட்டு மற்றும் வரையறுக்கப்பட்ட சர்வதேச சேவைகளை வழங்குகிறது.


அரசாங்கம் மற்றும் சமூகம்


அரசியலமைப்பு கட்டமைப்பு


இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடு அரசாங்கத்தின் அமைப்பும் 1950 இன் தேசிய அரசியலமைப்பின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. மாநிலத் தலைவர் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். ஆளுநருக்கு உதவியும் ஆலோசனையும் அளிக்கப்படும் அமைச்சர்கள் குழு, இது ஒரு முதலமைச்சரால் வழிநடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருமித்த சட்டமன்றத்திற்கு (விதான் சபை) பொறுப்பாகும். பெரும்பாலான அமைச்சகங்கள் சென்னையில் உள்ள 17 ஆம் நூற்றாண்டின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ளன . மாநிலத்தின் நீதித்துறையானது சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் (மெட்ராஸ் உயர் நீதிமன்றம்) தலைமையில் உள்ளது, இது அசல் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.மாநிலத்திற்கான நகரம் மற்றும் மேல்முறையீட்டு அதிகார வரம்பிற்கு; தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அசாதாரணமான அசல் வழக்குகளையும் உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம். மதுரையில் உயர்நீதிமன்ற பெஞ்ச் உள்ளது. கீழ் நீதிமன்றங்களில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட்டுகள் நீதிமன்றங்கள் மற்றும் முன்சிஃப்கள் (துணை நீதித்துறை அதிகாரிகள்) நீதிமன்றங்கள் ஆகியவை அடங்கும்.


மாநிலம் இரண்டு டஜன் நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு மாவட்ட ஆட்சியரால் நிர்வகிக்கப்படுகிறது. கீழ் நிர்வாக மற்றும் வருவாய் அலகுகள் தாலுகாக்கள் , ஃபிர்காக்கள் மற்றும் கிராமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பஞ்சாயத்துகள் (கிராம சபைகள்) உள்ளூர் சுய-அரசு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு பொறுப்பாகும்.


ஆரோக்கியம்


தமிழ்நாட்டின் மக்களின் மருத்துவத் தேவைகள் ஏராளமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. அலோபதி (மேற்கத்திய), ஆயுர்வேத மற்றும் சித்தா (பாரம்பரிய இந்திய), யுனானி (பரிந்துரைக்கப்பட்ட மூலிகைகள் மற்றும் புதர்களைப் பயன்படுத்தும் ஒரு முஸ்லீம் அமைப்பு), மற்றும் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டின் முதன்மை சுகாதாரக் கவலைகளில் காலரா , மலேரியா , ஃபைலேரியாசிஸ் (ஒட்டுண்ணிப் புழுக்களால் இரத்தம் மற்றும் திசுக்களின் தாக்கத்தால் ஏற்படும் நோய்), மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று ஆகியவை அடங்கும். மாநிலம் பெரும்பாலும் தொழுநோயைக் கொண்டு வந்துள்ளதுகட்டுக்குள் உள்ளது, இருப்பினும் ஆயிரக்கணக்கான வழக்குகள் ஆண்டுதோறும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.


பல்வேறு அரசு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பிற பாரம்பரியமாக பின்தங்கிய குழுக்களின் வீட்டுவசதி, கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஸ்பான்சர் செய்கின்றன. பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவி வழங்குகிறது. மன இறுக்கம், பெருமூளை வாதம் மற்றும் பிற வளர்ச்சி குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் உள்ளது .


கல்வி


பல்லாயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. கூடுதலாக, ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் மிக முக்கியமானவைசென்னை பல்கலைக்கழகம் (1857) மற்றும் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (1989), இரண்டும் சென்னையில் , அண்ணாமலை பல்கலைக்கழகம் (1929) சிதம்பரத்தில் ; தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (1971) கோவையில் ; மற்றும் மதுரையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (1966) . சென்னையில் உள்ள தட்சிண பாரத ஹிந்தி பிரச்சார சபை (1918) மற்றும் காந்திகிராமில் உள்ள காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகம் (1956), தென்மேற்கு-மத்திய தமிழ்நாட்டின், இந்தி மொழியையும் மகாத்மா காந்தியின் கருத்தையும் பிரபலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிறுவனங்களாகும். கிராமப்புற உயர்கல்வி முறையே. தஞ்சாவூர் அருகே தமிழ்ப் பல்கலைக்கழகம் (1981) .(தஞ்சை), மாநிலத்தின் கிழக்குப் பகுதியில், தமிழ் மொழி , இலக்கியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆய்வில் கவனம் செலுத்துகிறது .


தொடரும்

ஜே.ஜே.சிலகுறிப்புகள்,சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

ஜே.ஜே.சிலகுறிப்புகள்,சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

இணையத்தின் வேகம் பிரமிக்கச்செய்கிறது. நான் எழுதவந்த நாட்களில் ஒரு சிற்றிதழ்களில் பிரச்சினை எழுந்தால் அதற்கு பதில் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம். மூன்றிலிருந்து ஆறுமாதத்திற்குள் அது அச்சில் வரும். அதற்கான பதில் மீண்டும் அதே அளவு நாட்கள் கழித்து வெளியாகும். அதற்கு பதில் எழுதுகையில் ஒருவருடம் கழிந்திருக்கும். ஒருவருடகாலம் ஒரு கோபத்தை நீட்டிப்பது கஷ்டம்.நானெல்லாம் உடனே மறந்து என் வேலைக்கு திரும்பியமையால் புனைகதைகளை எழுதினேன். விவாதங்கலில் ஆழ்ந்து அழிந்தவர்களே அதிகம்.
இப்போது ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றிய கடிதத்தை எழுதி இணையதளத்தில் ஏற்றிவிட்டு போய் துணிதுவைத்துவிட்டு வரும்போது மின்னஞ்சல்பெட்டி நிறைந்திருக்கிறது. ஐயங்கள். கேள்விகள் பதில்கள்.
இரு அடிப்படை வினாக்களுக்கு மட்டும் என் பதில்கள். இவை பொதுவாசகர்களுக்கு உதவிகரமானவையாக இருக்கலாம்.
1. அன்புள்ள ஜெயமோகன், ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின்நவீனத்துவ வடிவம் கொண்டது என்கிறீர்கள். இப்போது சாரு நிவேதிதா எழுதும் நாவல்கள் போலத்தான் அவையும் இருக்கின்றன என்பதை இப்படி பார்க்கும்போது உணர முடிகிறது. சுயகதையும் உண்மையான மனிதர்களைப்பற்றிய விஷயங்களும் வம்புகளும் கிண்டலும் கலந்த வடிவம்தான் ஸீரோ டிகிரி முதலிய நாவல்களிலும் உள்ளது. ஜே.ஜே.சிலகுறிப்புகளை சாரு நிவேதிதா எப்படி வரவேற்றார்? அதைப்பற்றி அவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?
அன்புள்ள ….
சாருநிவேதிதா ஒரு சுவாரஸியமான பத்தி எழுத்தாளர் [காளம்னிஸ்ட்] மட்டுமே. பத்தி எழுத்தாளர்கள் எப்போதும் பெருவாரியான வாசகர்களின் பொதுவான ரசனைக்காக எழுதும் திறன் கொண்டவர்கள். அவர்களுடைய மனஅரிப்புகளையும் பாசாங்குகளையும் நோக்கிப் பேசுபவர்கள். பத்தி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் வருவதே அவர்கள் உண்மைகளை அஞ்சாமல் சொல்லும்போது மட்டும்தான். குல்தீப் நய்யார் என் முன்னுதாரணம். ஆனால் சாரு நிவேதிதா நேர்ப்பேச்சில் கூட தொண்ணூறு சதவீதம் பொய்தான் பேசுவார் என இருபது வருடங்களாக அவரை அறிந்த நான் கண்டிருக்கிறேன். உண்மையில் விதவிதமான பாசாங்குகள் வழியாக சென்றபடியே இருக்கும் அவரால் உண்மையை அவரே நினைத்தால்கூட பேச முடியாது.
சாரு நிவேதிதா அடிப்படையில் கற்பனையோ நுண்ணோக்கும் திறனோ இல்லாத மிக மேலோட்டமான எழுத்தாளர். அவரிடமிருக்கும் கற்பனை என்பது தன்னைப்பற்றி அவர் சொல்லும் அபத்தமான பொய்களில் மட்டுமே. அதேசமயம் ஒருபோதும் அவரை முற்றாக புறக்கணிக்க இயலாது. அதற்குக் காரணம் அவரது மொழிசார் நுண்ணுணர்வு. அவரது நடை ஒரு குறிப்பிட்டவகையில் தமிழில் சுஜாதாவின் நடைக்குப்பின் முக்கியமான ஒன்று. ஆழத்தை அது அடைய இயலாது, ஆனால் மேல்தளத்தில் சுழிப்புகளும் பாய்ச்சல்களுமாக பலவிதமான தோற்றங்களைக் காட்டுகிறது. இது ஒரு முக்கியமான பின் நவீனத்துவ இயல்பு.
சாரு நிவேதிதாவின் இலக்கிய ரசனை, வாசிப்பு, இசைரசனை,திரை ரசனை எல்லாவற்றின் மேலும் எனக்கு ஆழமான அவநம்பிக்கை உண்டு. அதற்குக் காரணம் காலம்தோறும் அவர் எழுதிவரும் கட்டுரைகளேதான். இலக்கியத்தின் அடிப்படைகளான பேரிலக்கியங்களில் வாசிப்போ எளிய அறிமுகமோ இருப்பதை அவர் வெளிப்படுத்தியதில்லை. அவர் வாசிக்கும் படைப்புகள் பெரும்பாலும் ‘பரபரப்பு’ நூல்கள். அவற்றில்கூட அவர் நுண்மைகளைத் தொடுவதேயில்லை. பெருவெட்டாகச் சொல்லப்பட்ட விஷயங்கள், அதுவும் நேரடியான வன்முறை மற்றும் காமச் சித்தரிப்புகளும் மிகையுணர்ச்சிகளும் மட்டுமே , அவர் கண்களுக்குப் படுகின்றன.அவ்வளவுதான் அவரது எல்லையே.
கோட்பாடு சார்ந்து அவர் எதுசொன்னாலும் அது பிழையான செவிவழிப்புரிதலாகவே இருக்கும். சென்றகாலங்களில் பின் நவீனத்துவம், அமைப்பியல் பற்றி அவர் சொன்னவற்றை நினைத்து பிற்பாடு நானே படிக்க ஆரம்பித்தபோது வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். எனக்குத்தெரிந்து எந்த சீரிய வாசகரும் அவரை ஓர் எல்லைக்குமேல் பொருட்படுத்துவதில்லை. மேலோட்டமான வாசகர்கள் சிலகாலம்வரை அவரது சரளமான எழுத்துநடையையும் நக்கல்களையும் ரசிப்பார்கள்.
சாரு நிவேதிதா எழுதும் வடிவம் அவர் தெரிவுசெய்துகொண்ட பின் நவீனத்துவ வடிவம் அல்ல. அவரால் முடிந்ததே அதுதான். கற்பனை இல்லாத எழுத்தாளர் என்றவகையில் அவர் கண்டது கேட்டது ஆகியவற்றை மட்டுமே அவரால் எழுத முடியும். அதுவும் ‘அப்படியே’. பெயர்களைக்கூட மூலப்பெயருக்கு நெருக்கமாக அமைத்து கிசுகிசுத்தன்மையை உருவாக்குவது அவரது வழக்கம். உண்மையான வாழ்க்கையை எழுதும்போது அதில் ஒருமையை, மையத்தை கொண்டுவருவது கஷ்டம்– காரணம் வாழ்க்கைக்கு அப்படி ஒரு ஒருமையும் மையமும் இல்லை. ஆகவேதான் சாரு நிவேதிதாவின் ஆக்கங்கள் சிதறுண்டிருக்கின்றன.
பின்நவீனத்துவ வடிவங்களில் மூலநூல்களை மறு ஆக்கம்செய்தல், போலிசெய்தல், எழுதுவதைப்பற்றிய எழுத்து, தனக்குள் செயல்பட்டு தன்னை கழித்துக் கொள்ளுதல், எல்லா தரப்பையும் ஒலிக்கவைத்து மாபெரும் விவாதத்தன்மையை உருவாக்குதல், தர்க்க ஒழுங்கை மொழியின் அராஜகம் மூலம் மீறி உன்னதத்தை [sublime] தொடுதல், வரலாற்றுக்குச் சமானமான புனைவுவரலாற்றை உருவாக்குதல் போன்ற முக்கியச் சாத்தியங்கள் எதையும் சாரு நிவேதிதா தொடக்கூட முடியாது. ஏன் அவர் அவற்றை வாசித்துக்கூட உள்வாங்கிக் கொள்ளமுடியாது. இன்றுவரை அதற்கான தடையத்தை அவர் வெளிப்படுத்தியதில்லை
அதேசமயம் உண்மையான வாழ்க்கையை எழுதியிருக்கிறார் என்ற மதிப்பு அவற்றுக்கு உண்டா என்றால் அதுவும் இல்லை. காரணம் நடுநிலைமையில் நின்று தன் வாழ்க்கைச்சூழலை எழுதுவதும், தன்னையே விமரிசனக் கண்ணோட்டத்துடன் நோக்குவதும் எளிதல்ல. சாதாரணமாக நாம் நம் வாழ்க்கையைப்பற்றி பேசும்போதுகூட நம் விருப்பக் கற்பனைகள், நமது காழ்ப்புகள், தன்னிரக்கங்கள், தற்பெருமைகள் ஆகியவை நமது சித்தரிப்பில் கலந்து வரும். அதை வெல்வது பெரும் கலைத்திறனோ அழுத்தமான நேர்மையோ உள்ளவர்களுக்கே சாத்தியம். சாரு நிவேதிதாவின் நாவல்கள் அவரது மனமாச்சரியங்களின், பாவனைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே. சாரு நிவேதிதா எழுதுவது பெரும்பாலும் அவரது காழ்ப்புகளால் திரிக்கப்பட்ட கிசிகிசுக்களை.
ஸீரோ டிகிரி அவரால் எழுதப்படச் சாத்தியமான இலக்கியம். அதன் நடையில் உள்ள கிண்டலும் விளையாட்டுகளும் பல்வேறு வகையான கிசுகிசுக்களும் கலந்து அதை ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கமாக மாற்றுகின்றன. தமிழ்ச் சூழலுக்கு அது ஒரு முக்கியமான ஆக்கம் என்று எண்ணுகிறேன். ஆனால் அவ்வளவுதான் அவர். அவரது நடையின் சரளம் நீண்டகாலம் எழுதுவதனால் மட்டுமே வருவது. அவர் தமிழின் பிரபல ஊடகங்களின் மொழிச்செயல்பாட்டை மிக ஊன்றிக் கவனித்துவருகிறார். அவற்றின் மீது ஆழமான அங்கத நோக்கு அவருக்கு உள்ளது. எழுதும்போது மொழிசார்ந்த நுண்ணுணர்வு விழித்திருப்பதன் சாத்தியங்களை ஸீரோ டிகிரியிலும், ராஸலீலாவின் முதல் பகுதியிலும் காணலாம்.
இந்த வடிவத்துக்கான முன்னுதாரணத்தை அவர் ஜே.ஜே.சிலகுறிப்புகள் லிருந்தே எடுத்துக் கொண்டார் என்பது உண்மையே. ஆனால் ஜே.ஜே.சிலகுறிப்புகள் வந்தபோது சாரு நிவேதிதா ஆற்றிய எதிர்வினை வேடிக்கையானது. அதை கடுமையாக நிராகரித்து அவர் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். அது இரு தளங்கள் கொண்டது. அக்கால மேலோட்டமான இடதுசாரி நிலைப்பாட்டில் நின்று ஜே.ஜே.சிலகுறிப்புகள்ளின் ‘அற’ நிலைப்பாட்டை நிராகரிப்பது முதல் தளம். எந்த அளவுக்குக் கொச்சையானது என்றால் குழந்தையை ஜேஜேயின் மனைவி பச்சை ஈர்க்குச்சியால் அடிப்பதை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான், குச்சியை பிடுங்கி அவளை இரண்டு போடவில்லை, அப்படியானால் அவன் என்ன யோக்கியன் — இந்த வகையில். இரண்டாம் தளம் அவரது வழக்கமான படம் காட்டல், இதெல்லாம் என்ன எழுத்து மேற்கே இதை தூக்கிச்சாப்பிடும் எழுத்துக்கள் உள்ளன என்பதுபோல.
அக்காலத்தில் சாரு நிவேதிதா சார்த்ரின் கோட்பாடுகளை தமிழர்கள் அறியாமல் இருப்பதைப்பற்றி வருந்திக் கொண்டிருந்தார். சார்த்ரின் ‘புரட்சிகரம்’ பற்றி எழுதித் தள்ளினார். அதே சமயத்தில் சார்த்ர் அந்த புரட்சிகரத்தை தாண்டி வேறு ஒருவகை கருத்துமுதல்வாதத்தை வந்தடைந்து சிமோன் த பூவாவால் ‘முதுமையின் மனச்சிக்கல்’ என்று விமரிசிக்கப்பட்டிருந்தார் என அவர் அறிந்திருக்கவில்லை. அங்கிருந்து அனைத்து ‘அரசியல் சரிநிலைபாடுகளையும்’ நிராகரிக்கும் பின் நவீனத்துவம் நோக்கி அவர் எப்போது எப்படி வந்தார் என்பதெல்லாம் மர்மங்களே.
பின் நவீனத்துவத்தின் அடிப்படையே political correctmess களை நிராகரிப்பதும் முரண்படுவதும்தான். ஆனால் பின் நவீனத்துவக்கூறு கொண்ட ஜே.ஜே.சிலகுறிப்புகள் இங்குள்ள பின் நவீனத்துவர்களால் நிராகரிக்கப்பட்டதே அரசியல் சரிநிலைபாடு சார்ந்த அளவீடுகள் மூலம்தான்.
2. அன்புள்ள ஜெயமோகன்
…..உங்கள் கடிதத்தில் உள்ள முக்கியமான முரண்பாடு ஜே.ஜே.சிலகுறிப்புகள் ஒரு பின்நவீனத்துவ நாவல் என்கிறீர்கள். நவீனத்துவத்தின் உச்சம் என்கிறீர்கள்….
அன்புள்ள ….
உங்கள் குழப்பத்தை சுருக்கமான சொற்களில் இவ்வாறு விளக்க முயல்கிறேன். ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின் நவீனத்துவ வடிவத்தையும் நவீனத்துவ நோக்கையும் ஒரேசமயம் கொண்ட நாவல்’
பின் நவீனத்துவம் புனைவை இது புனைவு மட்டுமே என்ற பாவனையில் வாசகன் முன் வைக்கிறது. இது உண்மையான வாழ்க்கை என்ற பாவனையில் அல்ல. ஆகவே புனைவுக்குள் அப்புனைவு உருவாக்கப்படும் விதம் பற்றிய சித்திரமும் இருக்கும். இதை மீபுனைவு [மெடா·பிக்ஷன் ] என்பது வழக்கம். புனைவு ஒற்றைப்படையாக ஒலிக்காமல் பல குரல்களை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என்று அது எண்ணுகிறது. ஆகவே ஒருமை இல்லாத சிதறுண்ட வடிவத்தை அது கொண்டிருக்கிறது. அதன் உட்கூறுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு விவாதிக்கின்றன. அதற்கு ஒரு மையம் திரண்டு வருவதில்லை.
நவீனத்துவம் எதிர்காலத்தை நோக்கி எழுதுகிறது. ஆகவே பெரும் கனவுகளையும் கோட்பாடுகளையும் உருவாக்குகிறது. பின் நவீனத்துவம் திரும்பி கடந்தகாலத்தை விமரிசனக் கண்ணோட்டத்துடன் நோக்குகிறது. ஆகவே அது கடந்த காலத்தை மறு ஆக்கம்செய்கிறது. உடைத்து பரிசீலனைசெய்கிறது. பகடி செய்கிறது. எழுத்தைப்பற்றி எழுதுகிறது. இலக்கியம் பற்றிய இலக்கியங்களை உருவாக்குகிறது. வாழ்க்கையிலிருந்து எழுதுவதற்குபதில் இலக்கியத்திலிருந்து எழுத முற்படுகிறது.
இக்கூறுகளில் பல ஜே.ஜே.சிலகுறிப்புகளில் உள்ளன என்பதைக் காணலாம். அதன் வடிவம் அவ்வகையில் பின் நவீனத்துவக் கூறுகள் கொண்டது. ஆனால் அது எழுத்தாளனின் உள்ளொளியை ஐயத்திற்கிடமில்லாமல் நிறுவ முயல்கிறது. அவனது சரிவை ஒரு பெரும் புனைவுஅவலமாக [டிராஜெடி]யாக முன்னிறுத்துகிறது. ஜே.ஜேயை முற்றாகக் கழித்துவிடும் ஒரு இன்னொரு ஆளுமை அந்நாவலில் இல்லை. அதன் மையமே ஜே.ஜே.தான். கலைஞனின் முதன்மை பற்றி பிற இடங்களில் சுந்தர ராமசாமி சொன்ன விஷயங்களே அதில் உள்ளன. அனைத்தும் சீரழிந்துவிட்டது, கலை ஒன்றே நம்மை மீட்க முடியும் என்றார் சுந்தர ராமசாமி. அதையே ஜே.ஜே.சிலகுறிப்புகளிலும் காண்கிறோம். அப்படி ஒரு லட்சியக்கனவை முன்வைப்பது முழுக்க முழுக்க நவீனத்துவம் சார்ந்தது

ஜே.ஜே.சிலகுறிப்புகள் தழுவலா? ஒரு கடிதம்

ராஜரத்தினம்
நண்பர் ஜெயமோகனுக்கு,
சமீபத்தில் ஒரு வலை தளத்தில் சற்று காட்டமான உள்ளீட்டை படித்தேன். இது ஜே ஜே somerset இன் moon and.. நாவலின் ஜெராக்ஸ் என்று சாடுகிறது.(ஆனால் அதற்கான காரணங்களை குறிப்பிடவில்லை) நானும் moon and six .. நாவலை உடனே வலையில் மேய்ந்து மேலோட்டமாக வாசித்தேன். ஓரளவு இரண்டு நாவலுக்கும் சார்பு உள்ளதாக உணர்ந்தேன் (moon and six சற்று நேர்க்கோடான கதை சொல்லல் முறையை பின்பற்றுவதாக உணர்கிறேன்.. ஆனாலும் தத்துவ ரீதியான குழப்பங்கள் கொஞ்சம் semi-autobiography முறை என இரு நாவல்களுக்கும் பொதுத்தன்மை இருக்க செய்கிறது) moon and six … முழுமையாக படிக்காததால் இது குறித்து மேலும் சொல்ல இயலவில்லை. ஆனால் ஜேஜேயில் தனித்தன்மை இருப்பதை மறுக்க இயலாது. என் கரிசனம் ஏன் இந்த சார்பு யாராலும் குறிப்பிட படவில்லை என்பதே.. jean christophe பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருந்ததை பார்த்தேன். இது போல் சார்பு பற்றி விவாதிக்க வேண்டியது ஒரு படைப்பாளியின் பொறுப்பு. அல்லது படைப்பை விமர்சிப்பவனின் பொறுப்பு.. சார்பு பற்றி அறியதாவரை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் சு.ரா அல்லது ஜேஜே விமர்சித்தவர்கள் அப்படி அறியாமை உள்ளவர்களாக தோன்றவில்லை. குறிப்பிடும் அளவு சார்பு இரு படைப்புகளுக்கும் இல்லாமல் இருப்பதாக எடுத்து கொண்டிருக்கலாம். ஆனாலும் என்னளவில் இந்த ஐயம் எழுந்து உள்ளது.. இந்த ஐயம் எந்தளவு நியாயமானது என்பதை அறிய விழைகிறேன்
அன்புள்ள நண்பர் ராஜரத்தினம் அவர்களுக்கு
சுந்தர ராமசாமியின் நாவலைப்பற்றிய உங்கள் கடிதத்தை கண்டு இதை எழுதுகிறேன். நீங்கள் சொல்லிய அந்த இழையை நான் படிக்கவில்லை. ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றி இந்த குற்றச்சாட்டு அது வெளிவந்த நாள் முதலே இருந்துள்ளது. 1982ல் நாவல் வெளிவந்ததுமே அம்பை அது ஒரு பிரெஞ்சுநாவலின் உல்ட்டா என்று குற்றம் சாட்டி பேசினாராம். உடனே பலர் தாங்கள் படித்த பிரெஞ்சு நாவல்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்கள். இக்குற்றச்சாட்டுகளால் வெதும்பிப்போன சுந்தர ராமசாமி இரண்டாம் பதிப்புக்கு பிரெஞ்சுக்காரரான ப்ராங்க்வா குரோ ஐ ஒரு பின்னுரை எழுதவைத்தார். அதில் அவர் இந்நாவல் எந்த பிரெஞ்சு நாவலுடைய தழுவலும் அல்ல, இது முழுக்க முழுக்க அசலானது என்று சொன்னார்
எனக்குத்தெரிந்து கடைசியாக ‘பெக் எ புக்’ வரை ஒரு இருபது நூல்கள் அவ்வாறு அதன் அசல்களாகச் சொல்லப்பட்டுள்ளன. இப்போது கடைசியாக இந்நூல். இனியும் நூல்கள் இவ்வாறு சுட்டப்படும். தமிழில் ஜே.ஜே.சிலகுறிப்புகள் மட்டும் ஏன் இந்த அளவுக்கு இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது என்று பார்த்தால் சில விஷயங்கள் கண்ணில் படும்.
ஜே.ஜே.சிலகுறிப்புகளின் அடிப்படை வடிவம் ‘ஒரு பெரிய எழுத்தாளனை இளம் எழுத்தாளன் அணுகிப் பார்த்தல்’ என்பது மேலை இலக்கியத்தில் மிக அதிகமாக எழுதபப்ட்டது. தமிழில் அதிகமாக எழுதப்படாததும் கூட. ஜே.ஜே.சிலகுறிப்புகளின் இதே வடிவம் கொண்ட நூறு நாவல்களை என்னால் சுட்டிக் காட்டமுடியும். சாமர்செட் மாம் எழுதிய நூல்களிலெயே மூன்று நாவல்களுக்கு இவ்வடிவம் உண்டு. ஜே.ஜே.சிலகுறிப்புகளுடன் இன்னும் அதிகமாகப் பொருந்துவது மாம்-ன் ‘கேக்ஸ் ஆண்ட் ஏல்’ என்ற நாவல். அதில் உள்ள அஷெண்டன் என்ற கதாபாத்திரம் பாலுவை பெரிதும் ஒத்திருக்கும்
ஒருவர் தன் நினைவுகள் வழியாக ஒருவரை பதிவுசெய்து போவதும், டைரிக்குறிப்பு வடிவமும் இதேபோல மேலை இலக்கியத்தில் மிகவும் பழகிப்போனவை. இந்திய இலக்கியத்தில்கூட இவ்வடிவத்தில் பல நல்ல நாவல்கள் உண்டு. சிவராம காரந்தின் ‘அழிந்தபிறகு’ ஒரு நல்ல உதாரணம். ஏன், சுந்தர ராமசாமி பற்றி நான் எழுதிய நினைவுக்குறிப்பான ‘சுரா-நினைவின் நதியில்’ கூட இதே பாணியில்தான் உள்ளது
கணிசமான வாசகர்கள் நாவல்களை ‘கதை’களாக வாசிக்க கூடியவர்கள். அதற்குமேல் நுண்ணிய அவதானிப்புகள் அவர்களுக்குச் சாத்தியமல்ல. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட நாவல்களில் எதை வாசித்தாலும் அதன் கதை ஜே.ஜே.சிலகுறிப்புகள் போல இருக்கிறதே என்ற எண்ணம் வருவது இயல்பே. அதை சிலரிடம் விவாதித்து தெளிவு படுத்திக் கொள்ள முடிந்தால் நல்லது.
ஆனால் அப்படி தோன்றிய கணமே தாங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறோம் என்ற பரபரப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதைச் சொல்வது வழியாக தங்கள் வாசிப்பை முன்நிறுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்ற ஆர்வம். மேலும் நம் வாசகர்களில் பலருக்கு– ஆங்கிலம் வழியாக வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு– தமிழில் என்ன எழுதியிருக்கப் போகிறார்கள், எல்லாம் ஆங்கிலத்திலிருந்துதான் எடுத்திருப்பார்கள் என்ற முன் தீர்மானம் ஏற்கனவே இருக்கிறது. நூற்றாண்டுகால அடிமைத்தனம் ஆழ்மனதில் உறைவதன் விளைவு அது. ஆகவே எழுதிவிடுகிறார்கள்.
ஜே.ஜே.சிலகுறிப்புகளின் வடிவம் ஒரு ‘நிலைவடிவம்’ [டெம்ப்ளேட்] போன்றது. அதில் என்ன நிரப்பப் பட்டுள்ளதோ அதுவே சுந்தர ராமசாமியின் படைப்பு. நாவல் இலக்கியத்தில் இத்தகைய பல நிலைவடிவங்கள் உண்டு. இன்னொரு உதாரணம் தன்னொப்புதல் [கன்·பெஷனல்] நாவல். இவ்வகை இலக்கியங்களை மெல்ல ஒரு தனிப்பட்ட வகைமையாகவே அங்கீகரிப்பது இலக்கிய வழக்கம். உலகப் பேரிலக்கியங்களில் கணிசமானவை இப்படி ஒரு பொதுவடிவத்தை கொண்டிருப்பவை. பல சமயம் ஏற்கனவே எழுதபப்ட்ட கதையை மீண்டும் எழுதியவை.
ஜே.ஜே.சிலகுறிப்புகள் முற்றிலும் சுந்தர ராமசாமியின் கற்பனையே என என்னால் உறுதியாகவே சொல்ல முடியும். அதற்கு முன்னுதாரணமாக இருந்தது கேரள நாடக ஆசிரியரான சி.ஜெ.தாமஸ். அவர் கோட்டயம்காரர். சிறுவயதில் அவர் ஒரு வீட்டில் வந்து தங்க, அருகே வசித்த சுந்தர ராமசாமியின் அப்பா எஸ்.ஆர்.சுந்தரம் அய்யர்[ எஸ்.ஆர்.எஸ்] மற்றும் டாக்டர் பிஷாரடி [இவரை நானே பார்த்திருக்கிறேன். முதல் காலச்சுவடு இதழுக்கு எம்.என்.ராயின் பிளாக்குகள் வாங்க என்னை சுந்தர ராமசாமி கோட்டயத்துக்கு அனுப்பியபோது. தொண்டு கிழமாக] ஆகியோருடன் சுந்தர ராமசாமியும் போய் பார்த்தார். அப்போது சி.ஜெ.தாமஸ் வரைந்தது காந்தி ஓவியம். பெரிய மாற்றம் இல்லாமல் இக்காட்சி அபப்டியே ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் வருகிறது
அன்றுமுதல் சி.ஜெ.தாமஸ் மேல் சுந்தர ராமசாமிக்கு தணியாத மோகம் இருந்தது. சி.ஜெ.தாமஸின் நெருக்கமான சகாவான எம்.கோவிந்தனை தன் மானசீக ஆசிரியராக வரித்துக் கொண்டவர் சுந்தர ராமசாமி .[அவரே நாவலில் எம்.கெ.அய்யப்பன்] செம்மீன் மொழிபெயர்த்து வந்த நாட்களில் கேரளத்தில் ·பாக்ட் கொச்சி நிறுவன மேலாளராக இருந்த எம்.கெ.கெ நாயர் [இவர் கோவிந்தனின் நெருக்கமான நண்பர். இலக்கியப் புரவலர். ‘யாரோடும் பகையின்றி…’ என்ற பிரபல மலையாள சுயசரிதையின் ஆசிரியர்] கொச்சியில் நடத்திய இலக்கிய மாநாட்டுக்கு போன சுந்தர ராமசாமி கடைசியாக சி.ஜெ.தாமஸைப் பார்த்தார். சிஜெ தமிழ் வணிகஇலக்கியத்தை லேசாக நக்கல்செய்து அப்பால் சென்றுவிட்டார். இங்கே தீவிர இலக்கியம் உண்டு என்ற தகவலை அவருக்குச் சொல்ல சுந்தர ராமசாமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சுந்தர ராமசாமி அப்போது நன்றாக பேசமாட்டார். இக்காட்சியே ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் வருகிறது
சி.ஜெ.தாமஸ் இறந்தபோது அவரது நண்பர் பி.கெ.பாலகிருஷ்ணன் [மலையாள நாவலாசிரியர். அவரது ‘இனி நான் உறங்கலாமா’ என்ற மலையாள நாவல் ஆ.மாதவன் மொழியாக்கத்தில் தமிழில் வந்துள்ளது. வரலாற்றாசிரியர். காலச்சுவடு இதழில் அவரது ‘சாதியமைப்பும் கேரள வரலாறும்’ என்றநூலின் சுருக்கம் என்னால் அளிக்கப்பட்டுள்ளது. என் ஆசிரியர் போல இருந்தவர்] அவரைப்பற்றி ஒரு நீண்ட நினைவுக்குறிப்பு எழுதினார். அது அவரது ‘மாயாத்த சந்தியகள்’ என்ற நூலில் உள்ளது. இக்குறிப்பு சுந்தர ராமசாமியை பெரிதும் கவர்ந்திருந்தது. இதிலுள்ள பல நிகழ்ச்சிகளின் மறுஆக்க வடிவம் ஜே.ஜே.சில குறிப்புகளில் உண்டு. இதுவே ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலுக்கு விதை.
பெரும்பாலும் சி.ஜெ.தாமஸின் ஆளுமை, தனி வாழ்க்கை ஆகியவற்றை பின் தொடரும் நாவல் ஜே.ஜே.சிலகுறிப்புகள். சி.ஜெயின் மனைவி ரோஸி தாமஸ் அதே காலகட்டத்தில் எழுதிய ‘இவன் என்றெ ப்ரிய சிஜெ..’ என்ற வாழ்க்கை குறிப்புகளின் பாதிப்பும் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலில் உண்டு. இதில் உள்ள பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு தெளிவான மலையாள முன்மாதிரிகள் உண்டு. சின்ன ஒருவரி கதாபாத்திரங்களுக்குக் கூட.
சுந்தர ராமசாமி இந்த உண்மையான வாழ்க்கைக் கூறுகளை அங்கதமாக மறு அமைப்புசெய்திருக்கிறார். அதுவே அவரது படைப்பூக்கம். அதன் வழியாக தமிழ்பண்பாட்டுச் சூழல் மீதான விமரிசனமாக இந்நாவலை உருவாக்குகிறார். உண்மையான வாழ்க்கையை திரிபுபடுத்தி எழுதுவது, அங்கதம், சிதறுண்ட வடிவம் ஆகியவை காரணமாக தமிழில் பின் நவீனத்துவ எழுதுமுறையின் முதல் உதாரணமாக விளங்குகிறது ஜே.ஜே.சிலகுறிப்புகள். அது நவீனத்துவத்தின் உச்சம். கடைசிப்படி. ஆகவே இயல்பாக பின் நவீனத்துவ எழுத்தின் முதல் படியும் கூட. நான் இவ்விஷயங்களை ஓரளவு ஏற்கனவே எழுதிவந்திருக்கிறேன் . உண்மையில் நாம் இன்னும் அந்நாவலை பற்றி பேசவே தொடங்கவில்லை
அன்புடன்
ஜெயமோகன்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes